Home One Line P2 சந்திராயன் 2: மிஞ்சிய 6 நாட்களில், இழந்த தொடர்பை மீண்டும் பெறுமா இஸ்ரோ?

சந்திராயன் 2: மிஞ்சிய 6 நாட்களில், இழந்த தொடர்பை மீண்டும் பெறுமா இஸ்ரோ?

858
0
SHARE
Ad

புது டில்லி: அண்மையில் விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தினை கண்டறிந்ததாகவும், அதனுடனான தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ முயன்று வருவதாகவும் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் சந்திராயன் 2 லேண்டருடன் இழந்த தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள, இஸ்ரோவுக்கு இன்னும் ஆறு நாட்கள்தான் கால அவகாசம் உள்ளது

சந்திரயான் 2 விண்கலத்திலிருந்து பிரிந்து நிலவில் தரையிறங்க 400 மீட்டர் (இந்தியா டுடேயில் ஆக கடைசியாக வெளியிடப்பட்ட தொலைவு அடிப்படையில்) தொலைவே இருந்தபோது, தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் விக்ரம் லேண்டருக்குமான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது என இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்தார்

#TamilSchoolmychoice

நிலவின் மேற்பரப்பில் இருக்கும் ரோவருக்கான ஆயுட் காலமானது ஒரு நிலவு நாள். இது கிட்டத்தட்ட 14 நாட்களுக்குச் சமமாகும். விக்ரம் லேண்டர், நிலவின் மேற்பரப்பில் சாய்ந்த நிலையில் விழுந்து ஒரு வார காலம் கடந்துள்ள நிலையில், அதனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே மிஞ்சி உள்ளது.