Home One Line P1 “நான் பிரதமர் பதவியை நினைத்துப்பார்த்ததே இல்லை, வேண்டுமென்றே குழப்புகிறார்கள்!”- முக்ரிஸ்

“நான் பிரதமர் பதவியை நினைத்துப்பார்த்ததே இல்லை, வேண்டுமென்றே குழப்புகிறார்கள்!”- முக்ரிஸ்

823
0
SHARE
Ad

அலோர் ஸ்டார்: பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முக்ரிஸ் மகாதீர் தாம் எட்டாவது பிரதமராக பதவியேற்பது குறித்து ஒருபோதும் நினைத்ததில்லை என்று இன்று சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

தனது தந்தை துன் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு பதிலாக அவரை சரியான வேட்பாளர் என்று வர்ணிக்கும் ஓர் அறிக்கை குறித்து தனக்கு ஒருபோதும் தெரியாது என்று அவர் கூறினார்.

இது வேண்டுமென்றே வெளியிடப்பட்ட கருத்து. அது எங்கிருந்து வந்தது என்று எனக்குத் தெரியவில்லைநான் எட்டாவது பிரதமராக இருக்க ஒருபோதும் நினைத்ததில்லைஎன்று அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

பிரதமராக டாக்டர் மகாதீருக்குப் பிறகு, பிகேஆர் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் அப்பதவியை ஏற்பதற்கு மிகுந்த நம்பிக்கையுடன் இருக்க வேண்டாம் என்று ஜாசின் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் டத்தோஶ்ரீ கைருடின் அபுஹாசன் நேற்று வெள்ளிக்கிழமை எச்சரித்திருந்தார்.