தொகுதி உடன்பாடு அடிப்படையில் நாங்குநேரியில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிடும் எனவும் விக்கிரவாண்டியில் திமுக போட்டியிடும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
இந்த இரண்டு தொகுதிகளுக்குமான வாக்களிப்பு அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெறும். வாக்குகள் அக்டோபர் 24-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 30 வரை வேட்புமனுத் தாக்கல் நடைபெறும். அக்டோபர் 1-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளாக அக்டோபர் 3-ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.