இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானதைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் ஆர்வலர்களில் ஒருவரும், முன்னள் விமானப்படை வீரருமான மனோகரனுக்கு இத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மனோகரன் ரூபி குழும நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிருவாக இயக்குநராக உள்ளார். மேலும் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியையும் வைத்திருக்கிறார்.
அடுத்த மாதம் தமிழ்நாட்டில் இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் இரண்டு தொகுதிகளில் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியும் ஒன்றாகும். மற்ற தொகுதியான விக்கிரவாண்டி, கட்சியின் கூட்டணியான திமுக போட்டியிடுகிறது. அதிமுகவின் ரெட்டியார்பட்டி வி.நாராயணனை ரூபி மனோகரன் எதிர்கொள்கிறார்.