“நாங்கள் மரண நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இணங்குகிறோம். மேலும், அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திலிருந்து மேலதிக அறிவுறுத்தல்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். விசாரணை ஒருபோதும் மூடப்படவில்லை, இன்னும் நடந்து கொண்டிருக்கிறது, இது தண்டனைச் சட்டம் 302-வது பிரிவின் கீழ் உள்ளது. சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துவோம்” என்று மியோர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு சிலாங்கூரின் சுபாங் ஜெயாவில் உள்ள ஸ்ரீ மகா மரியம்மன் கோயிலில் நடந்த கலவரத்தில் தீயணைப்பு வீரரான முகமட் அடிப் உயிரிழந்தார். இ ந் நிலையில் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையில், அவர் இரண்டு அல்லது மூன்று அடையாளம் தெரியாதவர்களினால் தாக்கப்பட்டு உயிர் இழந்துள்ளார் என்று கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தாக்குதலில் பலத்த காயமடைந்த முகமட் அடிப் கடந்தாண்டு டிசம்பர் 17-இல் கோலாலம்பூரில் உள்ள தேசிய இருதய சிகிச்சை மையத்தில் காலமானார்.