காவல் துறையின் பயங்கரவாத எதிர்ப்பு சிறப்புப் பிரிவின் தலைவர் அயூப்கான் மைடின் பிச்சை (படம்) இந்தத் தகவலை வெளியிட்டதோடு, அந்த 40 பேர்களில் 11 பேர் ஆண்கள், எஞ்சியவர்கள் பெண்கள், குழந்தைகள் எனவும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட ஆண்கள் சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டிருக்கின்றனர். பெண்களும், குழந்தைகளும் ஐ.நா. முகாம்களில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
சிரியாவில் இயங்கும் முகாம்கள் உணவுப் பற்றாக்குறையால் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கியிருப்பதாகவும் அயூப்கான் தெரிவித்தார்.
நேற்று சனிக்கிழமை இரவு ஈப்போவில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிகையாளர்களிடம் அயூப்கான் பேசிய போது இந்தத் தகவல்களை வெளியிட்டார்.