இந்தியர்கள் வணிகத்திலும், தனியார் துறை வாய்ப்புகளிலும் ஈடுபட வேண்டும் என்று அவர் கூறினார்.
இருப்பினும், இந்திய மக்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் சேவியர் தெரிவித்தார்.
“எங்கள் (இந்திய) மக்கள் தொகை மிகக் குறைவு. ஏழு சதவீதம் மட்டுமே. எதிர்காலத்தில் இது குறையும். இருப்பினும், இந்த சிறிய தொகையில் 70 விழுக்காட்டு மக்கள் வீட்டு வருமானமாக மாதம் 3,000-க்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர்.” என்று அவர் கூறினார்.
மலேசியாவில் உள்ள இந்திய சமூகம் அரசாங்கத்தின் வேலை வாய்ப்புகளையே நம்ப முடியாது என்று அவர் கூறினார்.
“அரசாங்கத்தைப் பற்றி சிந்திக்க வேண்டாம். தனியார் துறையில் பல வாய்ப்புகள் உள்ளன. முடிதிருத்தும் மற்றும் சலவை துறையில் வெளிநாட்டு தொழிலாளர்களை தடை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நமது இளைஞர்கள் இதன் மூலம் பயனடைய வேண்டும். முடிதிருத்தும் வணிகத்தை அமைப்பதில் என்ன தவறு?” என்று அவர் கூறினார்.
பிகேஆர் உதவித் தலைவருமான சேவியர் கூறுகையில், ஓர் இந்தியத் தலைவராக, இந்திய மக்கள் நம்பிக்கைக் கூட்டணீ மீதுள்ள நம்பிக்கையைப் புரிந்து கொண்டேன் என்று அவர் கூறினார்.
“நீங்கள் (இந்தியர்கள்) அதிக எதிர்பார்ப்புகளுடன் நம்பிக்கைக் கூட்டணியை ஆதரிப்பதை நாங்கள் அறிவோம். நான் ஒப்புக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.
இருப்பினும், உங்கள் எதிர்பார்ப்புகளை குறுகிய காலத்தில் பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்காது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
“அடுத்த நாள் எல்லாவற்றையும் மாற்றுவது பற்றி யோசிக்க வேண்டாம். அதற்கு நேரம் எடுக்கும். நாங்கள் பல்வேறு முயற்சிகளையும் செய்கிறோம்,” என்று அவர் கூறினார்.