Home One Line P1 விடுதலைப் புலிகள் விவகாரம்: 5 பேரை விடுவிக்க சமர்ப்பிக்கப்பட்ட ஆட்கொணர்வு மனு அக்டோபர் 31-இல் விசாரிக்கப்படும்!

விடுதலைப் புலிகள் விவகாரம்: 5 பேரை விடுவிக்க சமர்ப்பிக்கப்பட்ட ஆட்கொணர்வு மனு அக்டோபர் 31-இல் விசாரிக்கப்படும்!

686
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சம்பந்தம் இருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்ட 12 சந்தேக நபர்களில் 5 பேரை உடனடியாக விடுவிக்கக் கோரி சமர்பிக்கப்பட்ட ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் வருகிற அக்டோபர் 31-ஆம் தேதியை நிர்ணயித்து உள்ளது.

“தீபாவளியை அவர்கள் கொண்டாடும் வகையில் இதனை விரைவில் தீர்க்க முடியும் என்று நம்புகிறேன்” என்று வழக்கறிஞர் ராம் கர்பால் சிங் கூறினார்.

#TamilSchoolmychoice

சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் மற்றும் காடேக் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதன் உட்பட  எஸ்.அறிவானந்தன்  மற்றும் இரண்டு ஜசெக உறுப்பினர்களான சுரேஷ் குமார்எஸ்.சந்த்ரு சார்பாக இந்த மனு விண்ணப்பம் செய்யப்பட்டது.

பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்சட்டம் 2012 (சொஸ்மாவிதிகளின்படி சந்தேக நபரை கைது செய்வதில் பின்பற்றப்படாதது உள்ளிட்ட பல காரணங்களை அவர்கள் விண்ணப்பத்தின் அடிப்படையாக மேற்கோள் காட்டியதாக ராம் கர்பால் முன்னதாக கூறியிருந்தார்.

விண்ணப்பதை ஆதரிப்பதற்காக நாங்கள் பல அடித்தளங்களை உருவாக்கியுள்ளோம்இதில் சொஸ்மாவின் கீழ் உள்ள விதிமுறைகள் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படவில்லைஎன்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அவர்கள் செய்த குற்றங்கள் குறித்த விவரங்களை அவர்களுக்கு காவல் துறையினரால் தெரிவிக்கப்படவில்லை என்பதும்சொஸ்மாவில் கூறப்பட்டுள்ளபடி காவல் துறையினர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மட்டுமே வழக்கறிஞர்களின் அணுகலை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.