Home One Line P2 ப.சிதம்பரத்தின் தடுப்புக் காவல் நவம்பர் 13 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது!

ப.சிதம்பரத்தின் தடுப்புக் காவல் நவம்பர் 13 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது!

800
0
SHARE
Ad

புது டில்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு வருகிற நவம்பர் 13-ஆம் தேதி வரையிலும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக சிதம்பரத்தின் அமலாக்கத்துறையின் தடுப்புக் காவல் முடிவடைந்ததுதிகார் சிறையில் சிதம்பரத்திற்கு தனி அறை, கழிவறை வசதி, வீட்டில் சமைத்த உணவு மற்றும் மருந்துகள் வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்

இன்று வியாழக்கிழமை அமலாக்கத்துறையின் தடுப்புக் காவல் முடிவடைந்த நிலையில், இடைக்கால பிணை வழங்குமாறு சிதம்பரம் கோரிக்கை வைத்திருந்தார். இது தொடர்பான வழக்கு நாளை வெள்ளிக்கிழமை டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளது.