நஜிப் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் அரசாங்கத் தரப்பு நிரூபிக்கவில்லை என்று நீதிமன்றம் அவரை விடுதலை செய்யலாம்.
அல்லது அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபணமாயிருக்கின்றன என்று கூறி அவர் தனது தனது தற்காப்பு வாதங்களை முன்வைக்க அழைக்கப்படலாம்.
அல்லது, சில குற்றச்சாட்டுகள் மட்டுமே நிரூபணமாயிருக்கின்றன என்று கூறி அந்தக் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை மட்டும் தற்காக்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்படலாம்.
நஜிப்பின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகும் தீர்ப்பு இன்று காலை நீதிமன்றம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

