Home அரசியல் மலாய்க்காரர் அல்லது முஸ்லிம் மட்டுமே ஜோகூர் மந்திரி பெசாராக பதவி வகிக்க முடியும் – சலாவுடின்...

மலாய்க்காரர் அல்லது முஸ்லிம் மட்டுமே ஜோகூர் மந்திரி பெசாராக பதவி வகிக்க முடியும் – சலாவுடின் அயுப்

561
0
SHARE
Ad

salahuddin ayubஜோகூர்பாரு,ஏப்.8- மலாய்க்காரர்கள் அல்லது முஸ்லீம் மட்டுமே மந்திரி பெசார் பதவியையும், பிரதமர் பதவியையும் வகிக்க முடியும் என்று ஜோகூர் மாநில சட்ட  அமைப்பு  கூறுவதாகவும், அதனால் சீனர் ஒருவர் பிரதமராகவோ, மாநில மந்திரி பெசாராகவோ வர முடியாது என்று  பாஸ் கட்சியின் உதவித் தலைவர் சலாவுடின் அயுப் தெரிவித்தார்.

மக்கள் கூட்டணி வரும் பொதுத் தேர்தலில் ஜோகூர் மாநிலத்தைக் கைப்பற்றினால் மந்திரி பெசாராக நியமிக்கப்படுவார் என்று எதிர் பார்க்கப்படும் சலாவுடின் கூறுகையில் மொத்தமுள்ள 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் 50 சீன வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

சீனர்களும், இந்தியர்களும் பிரதமராக வர வேண்டும் என்று ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்று கூறிய சலாவுடின் தற்போது குபாங் கிரியாங் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

#TamilSchoolmychoice

வரும் பொதுத்தேர்தலில் கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள நூசா ஜெயா சட்டமன்றத் தொகுதியில் சாலாவுடின் அயுப் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.