நிலவில் தரையிறங்க 2 கிலோ மீட்டர் தொலைவில், இஸ்ரோ மற்றும் லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து லேண்டரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரோவிற்கு, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவும் உதவியது.
கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி சில புகைப்படங்களை நாசா வெளியிட்டது. அப்படங்களில் விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தைக் கண்டறிய, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இதனிடையே, லேண்டர் தரையிறங்கும் முன்பு அப்பகுதியில் எடுத்த புகைப்படங்களையும், நாசா எடுத்த புகைப்படங்களையும் ஒப்பிட்டு அடையாளப்படுத்தும்படி அது குறிப்பிட்டிருந்தது.
லுனார் ரிகனைஸ்ஸான்ஸ் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டரின் இருப்பிடம் அறியப்பட்டதாகக் குறிப்பிட்ட நாசா, விக்ரம் லேண்டர் விபத்துக்குள்ளான இடத்திலிருந்து 750 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதை முதன்முதலாக சண்முக சுப்பிரமணியன் என்ற இளைஞர் கண்டறிந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.