தமிழின் மேன்மை குறித்து விவரித்த வைரமுத்து மலேசியத் தமிழர்கள் தங்களின் அடுத்த கட்டத் தலைமுறையினரும் தமிழைப் பற்றித் தெரிந்து கொண்டவர்களாக, அதன் மேன்மையைப் புரிந்து கொண்டவர்களாக உருவாக்கப்பட முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து நமது தமிழ்ப் புலவர்கள் பல கவிதைகளில் தமிழர்களின் பண்பாடுகளையும், அந்தக் கால கலாச்சார மேன்மைகளையும் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள் என்றும் கூறிய வைரமுத்து, தமிழாற்றுப் படை நூலை முழுமையாக உருவாக்க தமக்கு நான்கு ஆண்டுகள் பிடித்ததாகவும் கூறினார்.

