Home One Line P2 சவுதி அராம்கோ – உலகின் மிகப் பெரிய பங்கு பொதுவிற்பனையில் 25.6 பில்லியன் டாலர் திரட்டப்பட்டது

சவுதி அராம்கோ – உலகின் மிகப் பெரிய பங்கு பொதுவிற்பனையில் 25.6 பில்லியன் டாலர் திரட்டப்பட்டது

792
0
SHARE
Ad

ரியாத் – சவுதி அரேபியாவின் ஏகபோக எண்ணெய் உரிம நிறுவனமான சவுதி அராம்கோவின் பங்குகள் பொது விற்பனை செய்யப்பட்டதில் 25.6 பில்லியன் டாலர் திரட்டப்பட்டது. இதுவே உலகின் மிகப் பெரிய பங்கு பொது விற்பனையாகக் கருதப்படுகிறது.

இதற்கு முன்னர் சீனாவின் அலிபாபா நிறுவனம்தான் உலகின் மிகப் பெரிய பங்கு பொது விநியோகத்தை நடத்தி அதன் மூலம் 25 பில்லியன் டாலர் முதலீட்டைத் திரட்டியது. தற்போது சவுதி அராம்கோ அந்த சாதனையை முறியடித்துள்ளது.

சவுதி அரேபியாவின் ஏகபோக எண்ணெய் உரிமங்களைக் கொண்ட அராம்கோ நிறுவனத்தின் மதிப்பு 1.7 டிரில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

200 பில்லியன் பங்குகளைக் கொண்டிருக்கும் அராம்கோ அதில் 1.5 விழுக்காட்டு பங்குகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்தது.

இதில் 0.5 விழுக்காட்டுப் பங்குகள் தனிநபர்களுக்கும் ஒரு விழுக்காட்டுப் பங்குகள் நிறுவன முதலீட்டாளர்களுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

சவுதி அராம்கோ 3 பில்லியன் பங்குகளை 32 ரியால் விலையில் (8.53 டாலர்) விற்பனை செய்ததில் 25.6 பில்லியன் டாலர் திரட்டப்பட்டிருக்கிறது.

பொதுப் பங்கு விற்பனையின் மூலம் சுமார் 25 பில்லியனுக்கும் மேற்பட்ட முதலீட்டு நிதியை ஈர்த்து அந்தத் தொகையைக் கொண்டு எண்ணெய் அல்லாத தொழில்களில் முதலீடு செய்து, கூடுதலான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் மாற்று வருமானங்களைக் கொண்ட நிறுவனமாக உருமாற்றவும் சவுதியின் ஆட்சியாளர் இளவரசர் முகமட் பின் சல்மான் முனைந்துள்ளார்.