Home One Line P2 பிலிப்பைன்ஸில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், 3 பேர் பலி!

பிலிப்பைன்ஸில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், 3 பேர் பலி!

949
0
SHARE
Ad

மணிலா: நேற்று ஞாயிற்றுக்கிழமை பிலிப்பைன்ஸின் தெற்கு கோட்டாபடோவில் உள்ள பொலோமோலோக்கில் ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் எந்த மலேசியர்களும் பாதிக்கப்படவில்லை என்று விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

தூதரக உதவி தேவைப்படும் மலேசியர்களுக்கு டவாவோ நகரில் உள்ள மலேசிய துணைத் தூதரகத்தை +63 82 221 4050 அல்லது +63 936 968 4001 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு வெளியுறவு அமைச்சகம் நேற்றிரவு ஓர் அறிக்கையில் அறிவுறுத்தியது.

அரசாங்கம் மற்றும் பிலிப்பைன்ஸ் குடியரசின் மக்களுக்கு, குறிப்பாக பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் அமைச்சகம் தெரிவித்துக் கொள்கிறது.”

#TamilSchoolmychoice

இந்த சவாலான சூழலில் மலேசியா பிலிப்பைன்ஸுடன்  நிற்கிறதுஎன்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த நிலநடுக்கம் இதுவரையிலும் ஆறு வயது சிறுமி உட்பட மூன்று உயிர்களை பலிகொண்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.