Home One Line P1 “பணக்காரர்களின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படாதீர்கள்!”- துன் மகாதீர்

“பணக்காரர்களின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படாதீர்கள்!”- துன் மகாதீர்

870
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாடு வளர்ச்சி அடைந்து வரும்  நிலையில், அனைத்து தரப்பினரும் பணக்காரர்களிடம் பொறாமைப்படக்கூடாது என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

மலேசியா சுதந்திர பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதால், வேலை செய்யத் தயாராக உள்ள எவருக்கும் வருமானத்தை அதிகரிக்கும் உரிமை உண்டு என்று பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும், அரசாங்கத்திற்கு செலுத்தப்படும் வரிகளில் இந்தக் குழுவினரின் பங்களிப்பு, நாட்டை நிர்வகிக்க பெரும் நிதியாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

நம்மில் சிலர் பணக்காரர்களாகக் கண்டால் பொறாமைப்படுகிறோம். குறிப்பாக நம் பங்களிப்புகளின் விளைவாக அவர்கள் பணக்காரர்களாக மாறும்போது பொறாமை எண்ணம் மேலோங்குகிறது. ஆனால், பொறாமையின் இந்த உணர்வுகள் நம்மைப் பாதிக்க விடாமல், கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.”

பணக்காரர்கள் அதிக வரி செலுத்த வேண்டியிருப்பதால், சில நேரங்களில் நூற்றுக்கணக்கான மில்லியன்கள் அரசாங்கத்திற்கு செலுத்தப்படுகின்றன. மேலும், இந்த பணம்தான் நம் சம்பளத்தை செலுத்துவதற்கும், நாட்டை மேம்படுத்துவதற்கும் நாம் பயன்படுத்துகிறோம்.”

நம் குடிமக்கள் அனைவரும் ஏழைகளாக இருந்தால், அல்லது வரி செலுத்தும் திறன் இல்லாவிட்டால், நாட்டை நிர்வகிக்க நிதி எங்கிருந்து கிடைக்கும்? இது நாம் எப்போதுமே சிந்திக்க வேண்டிய ஒன்று, ” என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், வறுமையில் இருந்து அவர்களுக்கு உதவுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை மக்கள் வரவேற்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.