இன்று வெளியிடப்பட்டிருக்கும் புதிய அறிக்கையின்படி, நால்வரும் எதிர்வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்கிலிடப்படுவர் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கொடூரச் செயலை ஆறு பேர் ஒன்றிணைந்து புரிந்தனர். அறுவரில் ஒருவன் 18 வயதுக்கு உட்பட்டிருந்ததால், அவன் சீர்திருத்தப் பள்ளிக்கு மூன்று ஆண்டுகளுக்கு அனுப்பப்பட்டான். ராம் சிங் எனும் குற்றவாளி சிறைச்சாலையிலேயே தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டான்.
இதனிடையே, நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகள் செய்து கொண்டிருந்த மேல் முறையீட்டு மனுக்களும், கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன.
குற்றவாளிகளான பவன் குப்தா, முகேஷ், வினய் சர்மா, அக்சய் குமார் சிங் ஆகிய நான்கு பேர் நிர்பயா கொலை வழக்குக்காக மரண தண்டனையை எதிர் நோக்கிக் காத்திருக்கின்றனர்.