காலை மணி ஏழு தொடங்கி பொங்கல் வைக்கும் போட்டி, சிறுவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி, உறி அடிக்கும் போட்டி, தோரணம் பின்னும் போட்டி, பூ தொடுக்கும் போட்டி என பல போட்டிகளில் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்கள் பங்கு பெற்றனர்.
அது மட்டுமல்லாமல் நமது பாரம்பரிய நடனங்களான கரகாட்டம், நெருப்பு கோலாட்டம், தலையாட்டி பொம்மை, மயிலாட்டம், பொய்கால் குதிரை, புலியாட்டம் இவற்றோடு உறுமி மேளம் என விழாக்கோலம் பூண்டது பூச்சோங் 14-வது மைலில் அமைந்துள்ள தமிழ்ப் பள்ளி வளாகம்.
தித்திக்கும் பொங்கல் வைத்து, உறி அடிக்கும் போட்டி நிகழ்ச்சியிலும் கலந்து சிறப்பித்தார். கலாச்சாரமும் பாரம்பரியமும் நிறைந்த இப்பொங்கல் நிகழ்ச்சியை ஒற்றுமையாக பல்வேறு இன மக்கள் கொண்டாடி மகிழ்வது பெருமையாக உள்ளது என்று கூறிய கோபிந்த் சிங், இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மின்னல் பண்பலையைப் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் அவரோடு பல பிரமுகர்களும் கலந்துக் கொள்ள மின்னலின் பொங்கல் கொண்டாட்டம் மேலும் உற்சாகமாக நடைபெற்றது.
காலை ஏழு மணி தொடங்கி பிறபகல் 2.00 மணி வரை நடைபெற்ற மின்னல் பண்பலையின் தித்திக்கும் பொங்கல் விழாவில் கலந்துக் கொண்ட அனைத்து அன்பர்களுக்கும் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற ஒத்துழைப்பு நல்கிய அனைத்து தரப்பினர்களுக்கும் மின்னல் பண்பலையின் நிர்வாகி திருமதி சுமதி நன்றியைத் தெரிவித்து கொண்டார்.
விரைவில் வெளிவரவிருக்கும் நம் நாட்டு திரைப்படங்கள் “உனக்காகதானே”, “சந்தித்த நாள் முதல்”, “அதிகாரி” திரைப்பட குழுவினர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் திரைப்படங்களை பற்றி நேயர்களிடம் பகிர்ந்து கொண்டனர். பேன்ஜீ, ஷீலா பிரவினா, பாலகணபதி, கர்ணன் ஜி கிராக், கல்பனா, விகர்ன், நந்தினி கணேசன், கோகிலா, சுசிலா, ஸ்ரீகாந்த், கபிலன் போன்ற கலைஞர்களும் பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
மின்னல் பண்பலை ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பொங்கல் நிகழ்ச்சிக்கு 1500-க்கும் அதிகமான நேயர்கள் கலந்து கொண்டது குறித்து, நேயர்களின் ஆதரவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்ட இந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் பிரேமா கிருஷ்ணன், பூச்சோங் நேயர்களின் வரவேற்பு தனக்கு மகிழ்ச்சியைத் தருவதாகத் தெரிவித்தார்.
மின்னல் பண்பலையின் பொங்கல் கொண்டாட்டம் நேயர்களை மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் கொண்டாட வைத்தது. மின்னல் பண்பலையின் பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்: