இப்பரிசோதனை நேற்று வியாழக்கிழமை (ஜனவரி 30) இரவு 8.00 மணி முதல் நடந்தது.
இப்பரிசோதனையில் பல அதிகாரிகள் களம் இறங்கினார்கள். ஜோகூர் மாநில ஒற்றுமை செயற்குழு மற்றும் உள்நாட்டு வர்த்தகம் & பயனீட்டாளர் நலன் துறை தலைவரான இராமகிருஷ்ணன் இப்பரிசோதனையில் கலந்துக் கொண்டு பொருட்களின் விலைகளைப் பரிசோதித்தார்.
இப்பரிச்சோதனையின் வாயிலாக, பெரும்பான்மையான வணிகர்கள் 2020-ஆம் ஆண்டு சீனப் பெருநாள் காலத்தின் அதிகபட்ச கட்டுப்பாட்டு விலை விதிகளையும் மற்றும் அமலாக்கங்களையும் முறையாகப் பின்பற்றியுள்ளனர் என்பது கண்டறியப் பட்டுள்ளது.
இப்பரிசோதனையின் போது, வியாபாரிகள் மீது எந்த வழக்கு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எனினும், விலைக் குறியீடுகளை மேம்படுத்துமாறு 4 வியாரிகளுக்கு நினைவுறுத்தலும் எச்சரிக்கைகளும் வழங்கப்பட்டுள்ளன.