Home One Line P2 ஊழல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஏர் ஆசியா, ஏர் ஆசியா எக்ஸ் பங்குகள் சரிவு!

ஊழல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஏர் ஆசியா, ஏர் ஆசியா எக்ஸ் பங்குகள் சரிவு!

671
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஏர் ஆசியா குரூப் பெர்ஹாட் மற்றும் ஏர் ஆசியா எக்ஸ் பெர்ஹாட் நிறுவனங்களின் நிர்வாகிகளும் ஊழலில் ஈடுபட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, இவ்விரண்டு நிறுவனங்களின் புர்சா மலேசியா பங்குகளும் வீழ்ச்சி அடைந்துள்ளன.

காலை 10.01 மணியளவில், ஏர் ஆசியா குழுமத்தின் பங்குகள் 13 சென் அல்லது 9.09 விழுக்காடு சரிந்து 20.95 மில்லியன் பங்குகள் கை மாற்றிக்கொண்டன.

ஏர் ஆசியா எக்ஸ் ஒரு சென் அல்லது 7.69 விழுக்காடு சரிந்து 12 சென் வரை 18.11 மில்லியன் பங்குகள் வர்த்தகம் செய்யப்பட்டது.

#TamilSchoolmychoice

ஏர்பஸ் எஸ்இக்கு எதிரான ரெஜினா வழக்கின் உண்மைகளை ஆராய்வதாக பாதுகாப்பு ஆணையம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

கடந்த சனிக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில் ஏர் ஆசியா இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தது. 

இதற்கிடையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் (எம்ஏசிசி) பிரட்டன் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு இரு நிறுவனங்களுக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.