சென்னை: இயக்குனர் செல்வராகவனின் வித்தியாசமான திரைக்கதையில் வெளியான புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என்ற படங்கள் இரசிகர்களின் பாராட்டைப் பெற்ற திரைப்படங்களாகும்.
அண்மையில் அவர் இயக்கிய என்ஜிகே திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை என்றாலும், இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த படத்திற்கு பிறகு தனது அடுத்த படம் குறித்த ஒரு தகவலை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் செல்வராகவன்.
ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை ஆகிய படங்களில் இரண்டாம் பாகத்தை கண்டிப்பாக எடுப்பேன் என்று அவர் கூறியுள்ள நிலையில், தற்போது செல்வராகவனின் இந்த அறிவிப்பு அவரது இரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.