Home One Line P1 காலை 11 மணிக்கு மகாதீர் மாமன்னரை சந்திக்கிறார்!

காலை 11 மணிக்கு மகாதீர் மாமன்னரை சந்திக்கிறார்!

577
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை சந்திக்க உள்ளார்.

மகாதீர் காலை 11 மணிக்கு ஆட்சியாளரை சந்திக்க உள்ளார்.

முன்னதாக, தற்போதைய அரசியல் கொந்தளிப்புக்கு அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். மேலும் அம்னோவை மீண்டும் அரசாங்கத்திற்குள் கொண்டுவருவதற்கு விரும்பவில்லை என்றும், தனது சொந்த கட்சியான பெர்சாத்து மேற்கொண்ட திட்டமிட்ட நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் நாட்டின் ஏழாவது பிரதமர் பதவியிலிருந்து விலகியதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

தனது உரையில், மகாதீர் ஒரு பாகுபாடற்ற அரசாங்கத்திற்கான தனது திட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஒற்றுமை அரசாங்கம், புதிய நிர்வாகம் அரசியல் கட்சிகளுக்கு பதிலாக தேசிய நலன்களில் கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார்.