70 உறுப்பினர்களைக் கொண்ட மேலவையில் தற்போது 16 காலியிடங்கள் உள்ளன என்று அவர் தெரிவித்தார்.
13 மாநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்த அந்தந்த மாநில சட்ட-சட்டமன்றங்களால் 26 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் இரண்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 44 உறுப்பினர்கள் பிரதமரின் ஆலோசனையின் பேரில் மாமன்னரால் நியமிக்கப்பட்டனர்.
நாடாளுமன்ற வலைத்தளத்தின்படி, பிரதமரின் ஆலோசனையின் பேரில் மாமன்னர் நியமனம் 14 காலியிடங்களை உள்ளடக்கியது. மேலும், இரண்டு காலியிடங்கள் மலாக்கா மற்றும் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசத்துக்கு உட்பட்டன.
ஒரு செனட்டரின் பதவிக்காலம் அதிகபட்சம் இரண்டு தவணையாகும். ஒவ்வொரு தவணையும் மூன்று ஆண்டு காலமாகும்.
“எனவே, அடுத்த பிரதமராக இருப்பவர் மொத்தம் 14 காலியிடங்களை நிரப்ப முடியும்” என்று விக்னேஸ்வரன் நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.
மாநிலங்களுக்கான ஒதுக்கீடு கிட்டத்தட்ட நிரம்பியுள்ளது என்பதையும் அவர் வெளிப்படுத்தினார்.
18 செனட்டர்களின் மூன்று ஆண்டு கால அவகாசம் இந்த ஆண்டு மார்ச் முதல் டிசம்பரில் முடிவடைகிறது.
விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினருக்கான பதவிக்காலம் ஜூன் 22 அன்று முடிவடையாகிறது.