Home One Line P1 பிரதமர் தேர்வு: மக்களவை தீர்வு காணும் இடமல்ல, மாமன்னரிடம் ஒப்படைக்கும் நேரம் வந்து விட்டது!- முகமட்...

பிரதமர் தேர்வு: மக்களவை தீர்வு காணும் இடமல்ல, மாமன்னரிடம் ஒப்படைக்கும் நேரம் வந்து விட்டது!- முகமட் ஹசான்

557
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் நிலவும் அரசியல் கொந்தளிப்பு உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்று அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் கூறினார்.

இந்த விஷயத்தை மாமன்னரிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் இது என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“இது அரசியலமைப்பில் (கூட்டரசு) வழங்கப்பட்டுள்ளபடி, மலேசியாவிற்கு ஒரு வழியை வழங்குவதற்கும் சிறந்ததைச் செய்வதற்கும் வழி வகுக்கும். மலேசிய நாடாளுமன்றம் ஒரு பிரதமரை நியமிக்கும் மன்றம் அல்ல.”

#TamilSchoolmychoice

“அனைத்து கட்சிகளும் மாமன்னரின் முடிவை மதிக்க வேண்டும். இந்த விஷயத்தில் அவரின் முடிவு நமக்கு வழிகாட்டும் ”என்று அவர் தெரிவித்துள்ளார்.