Home One Line P1 “மொகிதினுடன் இணைய என்னை யாரும் அணுகவில்லை, வருத்தமாக உள்ளது”- அன்வார் கிண்டல்!

“மொகிதினுடன் இணைய என்னை யாரும் அணுகவில்லை, வருத்தமாக உள்ளது”- அன்வார் கிண்டல்!

513
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அரசாங்கம் இன்னும் தடுமாறிக் கொண்டிருப்பதாகவும், கூடுதல் ஆதரவைப் பெறுவதற்காக இயங்கிக் கொண்டிருப்பதாகவும் பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், டான்ஸ்ரீ மொகிதின் யாசினின் அமைச்சரவையில் சேர அவரை வற்புறுத்துவதற்கு எந்தவொரு கட்சியும் அவரை அணுகவில்லை என்று போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.

“அவர்களின் வேலை ஒவ்வொருவராக சம்மதிக்க வைப்பது. என்னை யாரும் அணுகவில்லை. ” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

தற்போதைய அரசியல் நிலைமையானது பிகேஆர் கட்சிக்குள்ளேயே அதிகாரத்தைக் கொள்ளையடிக்கும் முயற்சி என்றும் அன்வார் விவரித்தார்.

இது ஒரு புதிய திட்டம் அல்ல என்றும், இந்த முயற்சி சமீபத்திய ஆண்டுகளில் பிகேஆரை நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.

“அந்த நேரத்தில் பலருக்கு சந்தேகம் இருந்தது. பொதுத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையை தகர்த்தவர்கள் இவர்கள்தான் என்று தெளிவாகத் தெரிகிறது,” என்று அவர் கூறினார்.

இருப்பினும், நடப்பது தற்காலிகமானது என்று அவர் உறுதியாக நம்பினார். மேலும் போராட்டத்தில் கவனம் செலுத்துமாறு பிகேஆர் ஆதரவாளர்களை அவர் வலியுறுத்தினார்.