Home One Line P1 பேராக்கில் புதிய அரசாங்கம் அமைகிறது!

பேராக்கில் புதிய அரசாங்கம் அமைகிறது!

662
0
SHARE
Ad

ஈப்போ: பேராக் மந்திரி பெசார் பதவிக்கு அம்னோ, பாஸ் மற்றும் பெர்சாத்து சுல்தான் நஸ்ரினுக்கு பல பெயர்களை முன்மொழியவுள்ளதாக பேராக் அம்னோ தொடர்பு குழுத் தலைவர் சாராணி முகமட் தெரிவித்தார்.

ஆயினும், தற்போதைக்கு பேராக் மாநிலத்தின் மந்திரி பெசார் தாம்தான் என நடப்பு மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு கூறியுள்ளார்.

பெரிக்காத்தான் நேஷனல் 32 சட்டமன்ற உறுப்பினர்களுடன் புதிய பேராக் மாநில அரசாங்கத்தை அமைக்கும் என்றும் அகமட் பைசால் அசுமு தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், முந்தைய பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் நியமனங்கள் அனைத்தும் இன்று முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.