Home One Line P1 பெரிக்காத்தான் நேஷனல்: 100 நாட்களில் மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளித்து, உடனடி தீர்வு காண வேண்டும்!-...

பெரிக்காத்தான் நேஷனல்: 100 நாட்களில் மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளித்து, உடனடி தீர்வு காண வேண்டும்!- சாஹிட் ஹமீடி

636
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டை ஆளும் தேசிய கூட்டணியின் முதல் 100 நாட்களில் மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதில், புதிய அரசாங்கம் உடனடி தீர்வு காண வேண்டும் என்று அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடி பரிந்துரைத்துள்ளார்.

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் 100 நாட்களுக்குள் அவர்களின் 10 உறுதிமொழிகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்ததைப் போலவே, தாபோங் ஹாஜி, பெல்டா, வாழ்க்கை செலவு மற்றும் தேசிய உயர்கல்வி நிதிக் கழகம் (பிடிபிடிஎன்) போன்ற பிரச்சனைகளை அரசாங்கம் உடனடியாக தீர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். .

“முதல் 100 நாட்களில், தேசிய கூட்டணி பெரிய மாற்றங்களின் தாக்கத்தைக் காண வேண்டும், மக்கள் உடனடி மாற்றத்தைக் காண விரும்புகிறார்கள்.”

#TamilSchoolmychoice

“நாம் நம்பிக்கைக் கூட்டணி அறிக்கைக்கு உட்பட்டவர்கள் அல்ல, எனவே மக்கள் மற்றும் தேசிய கூட்டணி முன்னணியில் இருக்கும் பிரச்சனைகள் மற்றும் தீர்வுகளில் கவனம் செலுத்துவது நமக்கு எளிதானது.”

“மக்கள் தாபோங் ஹாஜி மீண்டும் எழுவதை பார்க்க விரும்புகிறார்கள், பெல்டாவை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும். விவசாயிகள், மீனவர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் சிறு வணிகர்களின் தலைவிதியை உடனடியாக பார்க்க வேண்டும், ”என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுபாங் ஜெயாவில் ஸ்ரீ மகா மரியம்மன் சீபீல்ட் கோயில் அருகே நடந்த கலவரத்தில் இறந்த முகமட் அடிப் முகமட் காசிமின் ஆத்மாவுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

“பொது மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களின் தலைவிதியை குறிப்பாக பிடிபிடிஎன் கடன் வாங்குபவர்களை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும்.”

“அனைத்து ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களும், குறிப்பாக பி40 மற்றும் எம்40 குடும்பங்கள் மிகவும் இறுக்கமாகவும் சிக்கலாகவும் இருப்பதால் அவர்களை பாதுகாக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.