Home One Line P1 “இன்னும் துரோகிகள் இருந்தால், கூட்டணியை விட்டு வெளியேறுங்கள்” – அன்வார் எச்சரிக்கை!

“இன்னும் துரோகிகள் இருந்தால், கூட்டணியை விட்டு வெளியேறுங்கள்” – அன்வார் எச்சரிக்கை!

1003
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் நம்பிக்கைக் கூட்டணியை தொடர்ந்து வலிமைப் படுத்துமாறு கேட்டுக்கொண்டார். அவர்களின் கொள்கைகளை விட்டுவிடவோ அல்லது தியாகம் செய்யவோ கூடாது என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில் கூட்டணிக்கு வெளியே செயல்படும் “துரோகிகள்” கூட்டணியை விட்டு வெளியேறுமாறு அவர் எச்சரித்தார்.

என்ன நடந்தாலும், நம்பிக்கைக் கூட்டணி தொடர்ந்து ஒன்றாக இருந்து பலத்தை வளர்க்கும் என்று அன்வார் கூறினார்.

#TamilSchoolmychoice

“நாம் பீதி அடையக்கூடாது, ஆனால், நாம் மீண்டு வர வேண்டும்.”

“நாம் வலுவாக இருக்க வேண்டும், ஒரு சக்தியாக நகர்ந்து துரோகிகளின் மனக்கசப்பை மக்களுக்கு விளக்க வேண்டும்.”

“கொள்கைகளை விட்டுவிட்டு தியாகம் செய்யாதீர்கள்” என்று அவர் முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் அஸ்மின் அலி தரப்பில் இருக்கும் நம்பிக்கைக் கூட்டணி உறுப்பினர்களை உடனடியாக கூட்டணியில் இருந்து வெளியேறுமாறு அவர் எச்சரித்தார்.

“ஜனநாயக துரோகத்தின் இந்த அத்தியாயம் மீண்டும் நடக்க விடமாட்டோம்.” என்று அவர் கூறினார்.