Home One Line P1 தேசிய கூட்டணி பின் கதவு அரசாங்கம் அல்ல!- சுல்தான் ஷாராபுடின்

தேசிய கூட்டணி பின் கதவு அரசாங்கம் அல்ல!- சுல்தான் ஷாராபுடின்

507
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசாங்கத்தின் உருவாக்கம் பின் கதவு அல்லது பறிமுதல் மூலம் நடந்ததல்ல என்று சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா கூறியுள்ளார்.

அதற்கு பதிலாக, தேசிய கூட்டணி, அரசியல் அமைதியின்மையைத் தொடர்ந்து, நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தை மாற்றுவதற்கு அரச உத்தரவு அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு மாமன்னர் அரசியலமைப்பின் அடிப்படையில் ஒரு கவனமான முடிவை எடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

“கூட்டாட்சி அரசியலமைப்பின் விதிகளின்படி, மாமன்னர் கவனமாகவும், திறந்த ஆலோசனையுடனும் இந்த மாற்றங்களை பின்பற்றியுள்ளார்.”

“இந்த மத்திய அரசாங்கத்தை பின் கதவு அரசாங்கமாக அல்லது சதித்திட்டமாக அமைப்பது தொடர்பான குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை.”

“.அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், ஏனென்றால் மாமன்னருக்கு சட்டத்தில் தனது விருப்பப்படி செயல்பட அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.