Home One Line P1 கொவிட்-19 சம்பவங்கள் அதிகரித்தால், ஓய்வுபெற்ற மருத்துவர்கள் பணியாற்ற அழைக்கப்படுவர்!

கொவிட்-19 சம்பவங்கள் அதிகரித்தால், ஓய்வுபெற்ற மருத்துவர்கள் பணியாற்ற அழைக்கப்படுவர்!

376
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டில் கொவிட்-19 சம்பவங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகரித்தால், ஓய்வுபெற்ற மருத்துவர்கள் அல்லது இராணுவத்தில் பணியாற்றும் மருத்துவ அதிகாரிகளை அழைக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார்.

தேசிய சுகாதார முறையை மேம்படுத்தும் முயற்சியில், தற்போதுள்ள மருத்துவ மருத்துவர்களின் தேவைகளை சமநிலைப்படுத்த தேவையான நேரத்தில் மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

எவ்வாறாயினும், கொவிட்-19 சம்பவங்கள் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்த போதுமான மருத்துவர்கள் எண்ணிக்கை நாட்டில் இன்னும் உள்ளது என்று டாக்டர் அடாம் கூறினார்.

கொவிட்-19 பரவியதைத் தொடர்ந்து அன்றாட நடவடிக்கைகளை சீராக செய்ய நாடு முழுவதும் உள்ள 44 அரசு மருத்துவமனைகளில், 1,000 பயிற்சியாளர்களை வைப்பதற்கான அமைச்சின் முயற்சி இதில் அடங்கும், இதனால் தற்போதுள்ள மருத்துவர்கள் மீதான சுமை குறைகிறது என்று அவர் கூறினார்.

கடந்த வாரம் முதல் கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நாடு முழுவதும் 135 அரசு மருத்துவமனைகளில் ஊழியர்களின் திறனை அதிகரிக்க, ஒப்பந்த அடிப்படையில் 830 செவிலியர்களை அமைச்சகம் இணைத்துள்ளது.

இதற்கிடையில், இக்கொடிய நோயிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்க கொவிட் -19 தடுப்பு மருந்துகளை உருவாக்கக்கூடிய நாடுகளுடன் ஒன்றாக இணைந்து மலேசியா பணிபுரியும் என்றும் டாக்டர் அடாம் தெரிவித்தார்.

“நாங்கள் உலக சுகாதார நிறுவனத்துடன் இணைவோம். இதனால் எங்கள் நிபுணர்கள் ஒன்றிணைந்து செயல்படுவார்கள். இதனால் தடுப்பு மருந்து உருவாக்கும் நாடுகளில் ஒன்றாக நாம் மாற முடியும். இது எங்கள் மக்களைப் பாதுகாப்பதற்கான எதிர்கால முயற்சி” என்று அவர் கூறினார்.