Home One Line P1 கொவிட்-19: பங்கோர் தீவு சுற்றுலா பயணிகள், வெளிநாட்டவர்களுக்கு மூடப்பட்டது!

கொவிட்-19: பங்கோர் தீவு சுற்றுலா பயணிகள், வெளிநாட்டவர்களுக்கு மூடப்பட்டது!

451
0
SHARE
Ad

லுமுட்: கொவிட் -19 பாதிப்பைத் தடுப்பதற்காக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு ஏற்ப, மார்ச் 31 வரை, சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு பங்கோர் தீவு மூடப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில், பங்கோர் தீவில் வசிப்பவர்கள் மற்றும் கடமையில் உள்ள அரசு ஊழியர்கள் மட்டுமே அத்தீவுக்கு படகுகளில் ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்று மஞ்சோங் மாவட்ட அதிகாரி சுலிஷாம் அகமட் சுகோரி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“பங்கோர் தீவில் வெளியாட்கள் அனுமதிக்கப்படவில்லை. கடந்த சனிக்கிழமை முதல் மெரினா தீவு படகுத்துறையில் செயல்பாடுகள் மூடப்பட்டுள்ளன. தற்போது லுமுட் படகுத்துறை மட்டுமே செயல்பட்டு வருகிறது. இது உள்ளூர் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு மட்டுமே செயல்படும்,” என்று அவர் கூறினார்.

“ஒத்துழைப்பை வழங்கிய மக்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். முக்கியமான அல்லது அவசரகால விஷயங்களைத் தவிர்த்து நிலப்பகுதிக்குச் செல்ல அவர்கள் ஊக்குவிக்கப்படவில்லை” என்று அவர் கூறினார்.