Home One Line P1 கொவிட்-19: சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் நகரங்களுக்குத் திரும்ப வேண்டாம்- காவல் துறை அனுமதிக்காது!

கொவிட்-19: சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் நகரங்களுக்குத் திரும்ப வேண்டாம்- காவல் துறை அனுமதிக்காது!

676
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஏற்கனவே தங்கள் சொந்த ஊர்களில் இருப்பவர்கள், நகரங்களுக்குத் திரும்ப வேண்டாம் என காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

“இது நடக்காது என்று நம்புகிறேன். முன்னர் அறிவுறுத்தப்பட்டபடி நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருங்கள் ”என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று செவ்வாய்க்கிழமை கூறினார்.

#TamilSchoolmychoice

இந்த நடவடிக்கையில் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலைகளில் 23 சுங்கசாவடிகளில் காவல் துறையினர் சாலை தடுப்புகளை மேற்கொண்டுள்ளனர்.

“இங்கே, வாகன ஓட்டிகள் வீட்டிற்கு திரும்பி வருமாறு கேட்கப்படுவார்கள். வெளியில் உள்ளவர்கள் வேலை செய்ய பெரிய நகரங்களுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. காவல் துறையினர் அனுமதிக்க மாட்டார்கள், ”என்று அவர் மேலும் கூறினார்.