Home One Line P1 கொவிட்-19: தெலுக் இந்தான் மருத்துவமனை எப்போதும் போல, கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் செயல்படும்!

கொவிட்-19: தெலுக் இந்தான் மருத்துவமனை எப்போதும் போல, கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் செயல்படும்!

444
0
SHARE
Ad

ஈப்போ: தெலுக் இந்தான் மருத்துவமனையில் சுகாதார ஊழியர்களுக்கு கொவிட்-19 நோய்க்கான நேர்மறையான அறிகுறிகள் இருந்தபோதிலும், இயல்பாகவும் கட்டுப்படுத்தப்பட்ட நிலைகளிலும் அம்மருத்துவமனை செயல்பட்டு வருவதாக பேராக் மாநில சுகாதாரத் துறை இயக்குனர் டத்தோ டாக்டர் டிங் லே மிங் தெரிவித்தார்.

முதல் சம்பவம் கண்டறியப்பட்டவுடன் தொடர்ச்சியான மற்றும் விரிவான தொற்று நோய்கள் மற்றும் தொற்று கட்டுப்பாடு தடுப்பு நடவடிக்கைகள்மருத்துவமனையில் செயல்படுத்தப்படுவதால் அனைத்து நோயாளிகளும் பொதுமக்களும் தங்கள் பாதுகாப்பு குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் தினமும் இரண்டு நாள் தூய்மைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டதாகவும், வெளிநோயாளர் பிரிவுக்கு அடுத்துள்ள காத்திருப்பு அறையில் அவசர சேவைகள் தற்காலிகமாக நடத்தப்படுவதாகவும் டாக்டர் டிங் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தற்போதைக்கு, மருத்துவமனையின் அவசர சிகிச்சை துறை மஞ்சள் மற்றும் சிவப்பு மண்டலங்களுக்கான முக்கியமான சம்பவங்களில் மட்டுமே கவனம் செலுத்தும் என்றும், பசுமை மண்டலத்திற்கான அனைத்து முக்கியமான சம்பவங்களும் வெளிநோயாளர் பிரிவுக்கு அனுப்பப்படுவர் என்றும் அவர் கூறினார்.

“அருகிலுள்ள மருத்துவமனைகளில் இருந்து பணியாளர்கள் உதவி குறிப்பாக மருத்துவ அதிகாரிகள் மற்றும் உதவி மருத்துவ அதிகாரிகள் அவசர சிகிச்சைப் பிரிவில் உதவுமாறு கோரப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.