Home One Line P1 சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு அறிவிக்கப்பட்ட உதவியை புத்ராஜெயா பரிசீலித்து வருகிறது!

சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு அறிவிக்கப்பட்ட உதவியை புத்ராஜெயா பரிசீலித்து வருகிறது!

467
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு (எஸ்எம்ஈ) அறிவிக்கப்பட்ட உதவி நடவடிக்கைகளை புத்ராஜெயா பரிசீலித்து வருவதாக பிரதமர் துறை (பொருளாதாரம்) அமைச்சர் முஸ்தாபா முகமட் தெரிவித்தார்.

சிறு மற்றும் நடுத்தர வணிகத் துறையைச் சேர்ந்தவர்களுடன் அரசாங்கம் பல திட்டங்கள் குறித்து பேசி வருவதாகவும், வரும் நாட்களில் புதிய திட்டங்களை பரிசீலிக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“பிரதமர் இதை அக்கறையுடன் பார்க்கிறார். நாங்கள் சிறு மற்றும் நடுத்தர வணிக சமூகத்திலிருந்து கருத்துக்களைப் பெறுகிறோம்.”

“அவர்களுடனான தீவிரமான கலந்துரையாடலுக்குப் பின்னர், இந்த திட்டங்களில் சிலவற்றை நாங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். இது அரசாங்கத்தால் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது, ”என்று அவர் குறிப்பிட்டார்.

இறுதி திட்டங்கள் வரும் திங்கட்கிழமை முற்பகுதியில் தயாராக இருக்கக்கூடும் என்று நம்பப்படுவதாகவும், நிதி அமைச்சகம் அவற்றைச் செம்மைப்படுத்தும் பணியில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு, பணி மூலதனம் தேவை என்பதையும், குறைந்த ஊதிய மானியத்தை வழங்குவதை அவர்கள் எதிர்த்ததையும் அவர் ஒப்புக் கொண்டார். சம்பளம் கொடுக்க போதுமான நிதி இல்லாததால், புத்ராஜெயா இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

ஒரு மாதத்திற்கு ஓர் ஊழியருக்கு 600 ரிங்கிட்டிலிருந்து ஊதிய மானியத்தை அதிகரிக்க சில ஆலோசனைகள் உள்ளன, ஆனால் இந்த விவகாரம் இன்னும் விவாதிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.