Home One Line P2 கொவிட்-19 : பிரான்சில் ஒரே நாளில் உலகிலேயே மிக அதிகமான மரணங்கள் – 1355!

கொவிட்-19 : பிரான்சில் ஒரே நாளில் உலகிலேயே மிக அதிகமான மரணங்கள் – 1355!

722
0
SHARE
Ad

பாரிஸ் – நாள்தோறும் கொவிட்-19 தொடர்பான மரணங்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் வியாழக்கிழமை மட்டும் ஒரே நாளில் 1,355 மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

உலக நாடுகளில் ஒரே நாளில் பதிவு செய்யப்பட்ட மிக அதிகமான மரணங்கள் இது எனக் கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice

அமெரிக்காவில் மட்டும் நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொவிட்-19 பாதிப்பால் மரணமடைந்திருக்கின்றனர். மொத்த மரண எண்ணிக்கை 7,128 ஆக அதிகரித்திருக்கிறது.

அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 277,355 என அதிகரித்திருக்கிறது.

பிரான்சைத் தொடர்ந்து ஜெர்மனியிலும் கொவிட்-19 பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது அந்நாட்டு அரசாங்கத்திற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஜெர்மனி 91,959 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் மரண எண்ணிக்கை 1,277 என்ற நிலையில் குறைவாகவே இருக்கிறது. இதற்குக் காரணம் கொவிட்-19 சந்தேகம் இருந்தாலே உடனடியாக ஜெர்மனியில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால்தான், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக, ஆரம்ப நிலையிலேயே, கொவிட்-19 பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு, உரிய சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

ஆனால், இத்தாலி, பிரிட்டன் போன்ற நாடுகளில் கொவிட்-19 அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

உலகம் முழுவதிலும் கொவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை 1,097,909 ஆக பதிவு செய்யப்பட்டு மரண எண்ணிக்கை 59,131 என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதிக சுகாதார வசதிகள் இல்லாத மூன்றாம் உலக நாடுகளில் கொவிட்-19 பாதிப்புகள் குறைவாகப் பதிவு செய்யப்பட்டு, முன்னேறிய ஐரோப்பிய, அமெரிக்கா நாடுகளில் மிக அதிகமானோர் பாதிக்கப்படுவது மருத்துவ வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.