Home One Line P1 கொவிட்-19: புதிய சம்பவங்கள் 36-ஆகக் குறைந்தது!

கொவிட்-19: புதிய சம்பவங்கள் 36-ஆகக் குறைந்தது!

442
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டில் இன்று திங்கட்கிழமை (ஏப்ரல் 20) புதிதாக கொவிட் -19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 என சுகாதார அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5,425 ஆக உயர்ந்திருக்கிறது.

ஒரு நாளில் மட்டும் 98 பேர்கள் கொவிட்-19 தொற்றிலிருந்து முற்றாகக் குணமடைந்து இல்லம் திரும்பியிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,295 ஆக உயர்ந்துள்ளது.

#TamilSchoolmychoice

மொத்தம் 45 பேர்கள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 28 பேர்களுக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

இந்தத் தகவல்களை சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் தனது அன்றாட பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் இன்று வெளியிட்டார்.