Home One Line P1 கொவிட்-19: புதிதாக 88 சம்பவங்கள் பதிவு- ஒருவர் மரணம்!

கொவிட்-19: புதிதாக 88 சம்பவங்கள் பதிவு- ஒருவர் மரணம்!

352
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) வரை மலேசியாவில் கொவிட்-19 பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5,691-ஆக உயர்ந்துள்ளது.

புதியதாக 88 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையில் 13 பேர் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு திரும்பியவர்கள்.

இன்று ஒருவர் மரணமடைந்ததை அடுத்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 96-ஆக அதிகரித்திருக்கிறது என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இன்றைய 41 நிலையில் பேர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 18 பேர்கள் சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், இன்று 121 பேர் சிகிச்சையிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இதுவரையில் கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,663-ஆக உயர்ந்திருக்கிறது.