Home One Line P1 நெரிசலைத் தவிர்ப்பதற்கு குறிப்பிட்ட நேரத்தில் மக்களின் வெளியேற்றம் அமைய வேண்டும்!- புக்கிட் அமான்

நெரிசலைத் தவிர்ப்பதற்கு குறிப்பிட்ட நேரத்தில் மக்களின் வெளியேற்றம் அமைய வேண்டும்!- புக்கிட் அமான்

351
0
SHARE
Ad
படம் நன்றி : ஏஎப்பி

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கிராமத்தில் அல்லது வேறு இடங்களில் உள்ளவர்கள் வீடு திரும்ப விரும்ப அரசாங்கம் அனுமதித்தால் சரியான நேரத்தில் வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நெடுஞ்சாலைகளில் நெரிசல்களைத் தவிர்ப்பதற்காக போக்குவரத்து அமலாக்கத் துறை இந்த திட்டத்தை முன்வைத்தது.

மலேசிய காவல் துறை அவர்களின் இயக்கத்திற்கான சிறந்த திட்டத்தை முடிவு செய்வதற்கு காத்திருப்பதாக புக்கிட் அமான் போக்குவரத்து அமலாக்கத் துறை இயக்குனர் டத்தோ அசிஸ்மான் அலியாஸ் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“நெரிசலைத் தவிர்ப்பதற்காக எந்தவொரு திட்டத்தையும் குறிப்பிட்ட நேரத்தில் தேவைப்பட வேண்டும் என்றும் உச்ச நேரங்களில் நெரிசல் ஏற்பட்டுவிடக் கூடாது என்றும் போக்குவரத்து அமலாக்கத் துறை பரிந்துரைக்கிறது.”

“இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வெளியே செல்ல சிறந்த நேரம் என்று பரிந்துரைக்கப்படுகிறது,” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை பெர்னாமாவிடம் கூறினார்.