Home One Line P1 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா என்பது இரண்டு, மூன்று நாட்களில் அறிவிக்கப்படும்

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா என்பது இரண்டு, மூன்று நாட்களில் அறிவிக்கப்படும்

646
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மார்ச் 18 முதல் நடைமுறையில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை நீட்டிப்பது குறித்த எந்தவொரு அறிவிப்பும் பின்னர் செய்யப்படும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

“இப்போதைக்கு, எனக்குத் தெரியாது.”

“நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நீட்டிக்க வேண்டுமா அல்லது உயர்த்த வேண்டுமா என்று சுகாதார அமைச்சர் அரசாங்கத்திற்கு அறிவுறுத்தும்.”

#TamilSchoolmychoice

“அது காலாவதியாகும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னர் அரசாங்கம் அதை அறிவிக்கும், அதற்காக காத்திருங்கள்” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை கூறினார்.

மே 12- ஆம் தேதியுடன் முடிவடையும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா என்று கேட்கப்பட்டதையடுத்து இஸ்மாயில் இதனைக் கூறினார்.