Home One Line P1 பேட்ரிக் தியோவின் தடுப்புக் காவல் மே 14 வரை நீட்டிப்பு

பேட்ரிக் தியோவின் தடுப்புக் காவல் மே 14 வரை நீட்டிப்பு

605
0
SHARE
Ad
படம்: நன்றி டி ஸ்டார்

ஜோகூர் பாரு:  துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் மற்றும் ஜோகூர் அரச குடும்பத்தை அவமதிக்கும் நோக்கில் அறிக்கையை வெளியிட்டதன் தொடர்பான விசாரணைக்கு உதவ நடிகரும் வானொலி தொகுப்பாளருமான பேட்ரிக் தியோவின் தடுப்புக் காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 73 வயதான தியோவின் தடுப்பு காவல் இன்றுடன் முடிவடைய வேண்டும் என்று ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அயோப் கான் மிடின் பிச்சை தெரிவித்தார்.

“நாங்கள் (காவல்துறை) (தியோவை) ஜோகூர் பாரு கீழ்நிலை நீதிமன்றத்தில் தடுப்புக் காவலை நீட்டிக்கக் கோரி அழைத்துச் சென்றோம். மே 14, வியாழக்கிழமை வரை எங்களுக்கு இரண்டு நாட்கள் உள்ளன. நாங்கள் தொடர்ந்து விசாரிப்போம், ”என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

சனிக்கிழமை பெட்டாலிங் ஜெயா காவல் தலைமையகத்தில், ஜோகூர் காவல் துறை தலைமையகத்தின் வணிக குற்றவியல் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த காவல் துறை அதிகாரிகளால் தியோ கைது செய்யப்பட்டார் மற்றும் அவரது மடிக்கணினி பறிமுதல் செய்யப்பட்டது.

தியோ கைது செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, துங்கு இஸ்மாயிலை அவமதித்து முகநூல் பக்கத்தில் ஒரு மோசமான அறிக்கை பதிவிட்டதாக பொதுமக்களிடமிருந்து ஜோகூர் காவல் துறையினருக்கு புகார் அறிக்கை கிடைத்தது.