Home One Line P1 கொவிட்19: 37 புதிய சம்பவங்கள் பதிவு- இருவர் மரணம்

கொவிட்19: 37 புதிய சம்பவங்கள் பதிவு- இருவர் மரணம்

413
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: இன்று புதன்கிழமை (மே 13) நண்பகல் வரை மலேசியாவில் 37 புதிய சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கொவிட்19 பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,779-ஆக உயர்ந்திருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 58 பேர் கொவிட் பாதிப்பிலிருந்து விடுபட்டு, இல்லம் திரும்பியிருக்கின்றனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,281-ஆக உயர்ந்திருக்கிறது என்று சுகாதார அமைச்சின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுமையிலும் 1,387 பேர் மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 16 பேருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது. 4 பேர் சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இன்று இருவர் மரணமடைந்துள்ள நிலையில், நாட்டில் மரணமுற்றவர்களின் எண்ணிக்கை 111 பேராக உயர்ந்துள்ளது.