Home One Line P1 நேற்று நடந்தது பெர்சாத்து பத்திரிகையாளர் சந்திப்பு- சைபுடின்

நேற்று நடந்தது பெர்சாத்து பத்திரிகையாளர் சந்திப்பு- சைபுடின்

494
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஒரு கூட்டு ஊடக அறிக்கையை வெளியிடுவார்கள் என்று நம்பிக்கைக் கூட்டணி முடிவு செய்திருந்தது.

ஆயினும், நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து பெர்சாத்துவின் நிலைப்பாடு குறித்து பேசப்பட்டதாக பிகேஆர் பொதுச்செயலாளர் சைபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.

கடந்த வார இறுதியில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

நேற்று செய்தியாளர் கூட்டத்தில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் இல்லாததை விளக்க முயன்றபோது சைபுடின் இதனை தெரிவித்தார். அக்கூட்டத்திற்கு ஒரு பிகேஆர் பிரதிநிதி கூட வரவில்லை.

“அன்வார் தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணி மற்றும் துன் டாக்டர் மகாதீர், ஷாபி அப்டால் ஆகியோர் மே 17 ஒரு கூட்டு அறிக்கையை மே 18 வழங்க ஒப்புக்கொண்டனர்.”

“பெர்சாத்துவின் நிலைப்பாட்டை விளக்க, மகாதீர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவதற்கும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்” என்று மலேசியாகினியைத் தொடர்பு கொண்டபோது சைபுடின் கூறினார்.

சைபுடின் கருத்துப்படி, அமானா தலைவர் முகமட் சாபு மற்றும் ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் அந்த செய்தியாளர் கூட்டத்தில் இருப்பது மகாதீருக்கு தார்மீக ஊக்கமளிப்பதற்காக என்று அவர் கூறினார்.