Home One Line P1 மலாக்கா, பேராக் மற்றும் பினாங்கில் மாநில எல்லைகளைத் தாண்ட அதிகமான முயற்சி

மலாக்கா, பேராக் மற்றும் பினாங்கில் மாநில எல்லைகளைத் தாண்ட அதிகமான முயற்சி

449
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அதிகமாக மாநில எல்லைகளைத் தாண்ட முயற்சிகளைக் மேற்கொண்ட மாநிலங்களாக மலாக்கா (886), பேராக் (362), மற்றும் பினாங்கு (284) திகழ்வதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

இதனிடையே, நேற்று வியாழக்கிழமை மட்டும் 2,539 வாகனங்கள் மாநில எல்லைகளைத் தாண்ட முயற்சி செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். காவல் துறையினர் அவர்களை திருப்பி அனுப்பியுள்ளதாக அவர் கூறினார்.

வெவ்வேறு மாநிலங்களில் வசிக்கும் தம்பதிகளுக்கும் இனி மாநிலங்களுக்கு இடையிலான பயணத்தை மேற்கொள்ள அனுமதி இல்லை என்று அமைச்சர் தெரிவித்தார்