Home One Line P2 ஆர்ப்பாட்டம் வெடித்ததால் வெள்ளை மாளிகை பாதுகாப்பு அறைக்குள் டிரம்ப் அனுப்பப்பட்டார்

ஆர்ப்பாட்டம் வெடித்ததால் வெள்ளை மாளிகை பாதுகாப்பு அறைக்குள் டிரம்ப் அனுப்பப்பட்டார்

572
0
SHARE
Ad

வாஷிங்டன்: வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை இரவு எதிர்ப்பாளர்கள் வெள்ளை மாளிகைக்கு வெளியே கூடியிருந்தபோது, ​​அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகை பாதுகாப்பு அறைக்குள் குறிப்பிட்ட காலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக வெள்ளை மாளிகை அதிகாரி மற்றும் சட்ட அமலாக்க வட்டாரம் தெரிவித்துள்ளது.

முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் மற்றும் அவர்களது மகன் பரோன் ஆகியோரும் பாதுகாப்பு அறைக்குள் கொண்டு செல்லப்பட்டதாக ஒரு சட்ட அமலாக்க வட்டாரம், இந்த விஷயத்தை சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.

“வெள்ளை மாளிகையின் நிலை ‘சிவப்பு’ நிலைக்கு உயர்த்தப்பட்டு அதிபர் அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு அனுப்பப்பட்டால், மெலனியா டிரம்ப், பரோன் டிரம்ப் மற்றும் வேறு முதல் குடும்ப உறுப்பினர்களும் அவ்வாறு அனுப்பப்படுவார்கள்.” “என்று வட்டாரம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

ஞாயிற்றுக்கிழமை இரவு, வெள்ளை மாளிகை திங்களன்று வேலைக்குச் செல்ல வேண்டிய ஊழியர்களை எச்சரித்தது. அவர்கள் ஓர் இரகசிய நுழைவு இடத்தை அடையும் வரை தங்கள் அடையாள அட்டைகளை மறைக்க வேண்டும் என்றும், வெளியேறும் போது அவற்றை மறைக்க வேண்டும் என்றும் சிஎன்என் பார்த்த ஒரு மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறியது.

அதிபர் டிரம்ப் பாதுகாப்பு அறைக்குள் கொண்டு செல்லப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் முதலில் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமையன்று, வெள்ளை மாளிகைக்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் முடிந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, நகரின் ஜனநாயகக் கட்சி மாநகராட்சி மன்றத் தலைவரைக் கண்டித்து டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.