எனினும் இன்று மரணங்கள் ஏதும் நிகழவில்லை.
புதிதாக அடையாளம் காணப்பட்ட 38 பாதிப்புகளில் 26 சம்பவங்கள் இறக்குமதி செய்யப்பட்டவை. மீதமுள்ள 12 சம்பவங்களில் 6 பேர் வெளிநாட்டினர். 6 பேர் மலேசியர்கள் என்று அவர் தெரிவித்தார்.
இன்று 51 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,404-ஆக உயர்ந்தது.
1,338 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவர்களில் எண்மர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில், இருவர் சுவாசக் கருவி தேவைப்படுகிறது.