Home One Line P1 கோலா லங்காட்டில் முழுமையான கட்டுப்பாடு அமலுக்கு வந்தது

கோலா லங்காட்டில் முழுமையான கட்டுப்பாடு அமலுக்கு வந்தது

506
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கோலா லங்காட்டில் உள்ள புக்கிட் சாங்காங் நேற்றிரவிலிருந்து முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டுக்கு கீழ் வைக்கப்பட்டது.

தாமான் லங்காட் உத்தாமா மற்றும் தாமான் லங்காட் முர்னி ஆகிய இரு இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நேற்று இரவு நாங்கள் லங்காட் உத்தாமா மற்றும் லங்காட் முர்னி ஆகிய இடங்களில் முட்கம்பிகளை அமைத்துள்ளோம்.” என்று காவல் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இப்பகுதியில் உள்ளூர்வாசிகளும், வெளிநாட்டவர்களும் இருப்பதால், உண்மையான மக்கள் தொகை இன்னும் அறியப்படவில்லை என்று அவர் கூறினார்.

இரண்டு பகுதிகளும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள் மற்றும் கடை வீடுகளை ஒட்டியிருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது.