Home One Line P1 நான்கு நண்பர்கள் மரண தண்டனையை எதிர்நோக்குகின்றனர்

நான்கு நண்பர்கள் மரண தண்டனையை எதிர்நோக்குகின்றனர்

806
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: கடந்த ஆகஸ்டில் இஸ்காண்டார் புத்ரி, தாமான் ஸ்ரீ புலாய் என்ற இடத்தில் குழந்தைகள் விளையாட்டு மைதானத்தில் ஒருவரைக் கொன்ற குற்றச்சாட்டில் நான்கு பேர் இன்று கீழ்நிலை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களான, எஸ்.பிரசான், 23, பி.சார்வின், 23, எஸ். பிரவீன்ராஜ், 30, மற்றும் ஏ.வினோட்குமார், 33, ஆகியோர் நீதிபதி முகமட் ஜாகி அப்துல் ரஹ்மான் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அதன் பொருள் புரிவதாக ஆமோதித்தனர்.

இருப்பினும், ஒப்புதல் வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

#TamilSchoolmychoice

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10- ஆம் தேதி மதியம் 12.50 மணியளவில் ஜாலான் மெராந்தி 13, தாமான் ஸ்ரீ புலாய் என்ற இடத்தில் ஜே.கே.ஸ்ரீதரன் (20) என்பவரை கொலை செய்தததற்காக இந்த நான்கு பேரும் கூட்டாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருக்கும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதே சட்டத்தின் பிரிவு 34 உடன் இணைந்து குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.

பிரேத பரிசோதனை அறிக்கைக்குக் காத்திருக்கும் வரை வழக்கு மீண்டும் ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.