Home One Line P1 கொவிட்19: புதிய சம்பவங்கள் 43 ஆக உயர்வு – ஒருவர் மரணம்

கொவிட்19: புதிய சம்பவங்கள் 43 ஆக உயர்வு – ஒருவர் மரணம்

549
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அறிவித்தார்.

நேற்று 33 ஆக இருந்த இந்த எண்ணிக்கை இன்று 43 ஆக உயர்ந்துள்ளது. ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,445-ஆக உயர்ந்தது.

#TamilSchoolmychoice

இன்று ஒருவர் மரணமுற்றதைத் தொடர்ந்து நாட்டின் மரண எண்ணிக்கை 120-ஆக உயர்ந்தது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 43 பாதிப்புகளில், 5 சம்பவங்கள் இறக்குமதி சம்பவங்களாகும். எஞ்சிய 38 பேர் உள்ளூரிலேயே தொற்று கண்ட மலேசியர்களாவர்.

இன்று 143 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,311-ஆக உயர்ந்தது.

1,014 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். யாருமே சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை பெறவில்லை.