Home One Line P1 தேசிய விளையாட்டு சங்கங்களுக்கு 10 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி

தேசிய விளையாட்டு சங்கங்களுக்கு 10 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி

444
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ‘இனிசியேட்டிவ் ப்ரிஹாதின் சுக்கான் 2020’ திட்டத்தின் மூலம் தேசிய விளையாட்டு சங்கங்களுக்கு 10 மில்லியன் ரிங்கிட் நிதியுதவியை அறிவித்துள்ளது.

அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ ரீசால் மெரிக்கன் நைனா மெரிக்கன், காணொளி பதிவில், நாட்டில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு, குறிப்பாக விளையாட்டு ஆணைய அலுவலகத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட பங்குதாரர்களாக இருப்பவர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறினார்.

ரீசால் மெரிக்கன் கருத்துப்படி, இனிசியேட்டிவ் ப்ரிஹாதின் சுக்கான் 2020 கீழ், 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு மூன்று வகை உதவிகளாக பிரிக்கப்படும்.  அதாவது, விளையாட்டு ஆணையின் கீழ் பதிவுசெய்யப்பட்ட தேசிய விளையாட்டு சங்கங்களுக்கு, மேலாண்மை உதவிக்கு 2 மில்லியன் வழங்கப்படும்.

#TamilSchoolmychoice

“தகுதிவாய்ந்த தேசிய விளையாட்டு சங்கங்களுக்கு தலா 5,000 முதல் 10,000 ரிங்கிட் வரை உதவி வழங்கப்படும். இது நாடு முழுவதும் 200 தேசிய விளையாட்டு சங்கங்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ” என்று அவர் கூறினார்.

இரண்டாவது வகையானது அனைத்து மட்டங்களிலும் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு சங்கங்களுக்கான திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை மேற்கொள்ள உதவும் நோக்கத்திற்காக 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு ஆகும். இது விளையாட்டு ஆணையத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து விளையாட்டு சங்கங்களுக்கும் திறந்திருக்கும்.