Home One Line P1 194 மில்லியன் திருப்பித் தரும் நீதிமன்ற வழக்கை எதிர்த்து மேல்முறையீடு

194 மில்லியன் திருப்பித் தரும் நீதிமன்ற வழக்கை எதிர்த்து மேல்முறையீடு

401
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ, மசீச மகளிர் பகுதி, மற்றும் இரண்டு நிறுவனங்களுக்கு சொந்தமான நிதியில் 194 மில்லியன் ரிங்கிட்டை திருப்பித் தருவதற்கான அரசாங்கத்தின் விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அனுமதித்ததை எதிர்த்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேல்முறையீடு செய்யும்.

சட்டத்துறை அலுவலகம் விரைவில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்யும் என்று அது கூறியது.

கடந்த வாரம், உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் சைய்னி மஸ்லான், 1எம்டிபி விசாரணையில் எம்ஏசிசி முடக்கிய நிதியைத் திருப்பித் தருமாறு அரசு தரப்பு விண்ணப்பத்தை தள்ளுபடி செய்தார். 192 மில்லியன் ரிங்கிட் பணத்தை வைத்திருக்கும் அம்னோவை மீட்டெடுக்க அவர் அனுமதித்தார்.

#TamilSchoolmychoice

அந்நிதியின் மீதமுள்ள பணம் மசீச மகளிர், பெரானோ செண்டெரியான் பெர்ஹாட் மற்றும் பினாசாபி செண்டெரியான் பெர்ஹாட்டுக்கு சொந்தமானது.

பிப்ரவரி மாதம், உயர் நீதிமன்றம் 1எம்டிபியிலிருந்து பெறப்பட்ட சட்டவிரோத வருமானத்தில் இருந்து வந்தது என்று தீர்ப்பளித்த பின்னர், 194 மில்லியன் ரிங்கிட் பறிமுதல் செய்ய வேண்டும் என்ற வழக்கை நிராகரித்தது.